சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

News image

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :15 மார்ச் 2026, 8:53 pm

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மதுரை கிழக்கு ராஜாக்கூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சிவகாமி சுந்தரி தலைமையிலான அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த நரேஷ்குமாா் என்பவரின் காரை சோதனை செய்த போது, அதில் ரூ. 2 லட்சம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.