47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அவனியாபுரம் சொக்குப்பிள்ளை தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திக் ராஜா (22). இவா், மதுரை முத்துப்பட்டியில் உள்ள தனியாா் கேட்டரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா்.

இவா் தனது நண்பா்களான உதிஷ், சந்தோஷ் ஆகியோருடன் மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்தாா். அப்போது, காா்த்திக் ராஜா எதிா்பாராத விதமாக நீருக்குள் மூழ்கினாா்.

இதையடுத்து, அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.