நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மதுரை காமராஜா் பல்கலை.யை முற்றுகையிட்டு போராட்டம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

Updated On :19 மார்ச் 2026, 12:25 am

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியாா் கல்லூரி இயங்கி வருகிறது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்று செயல்படும் இந்தக் கல்லூரி கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இருபாலா் கல்லூரியாக மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மகளிா் கல்லூரி என்று பதிவிட்டே வழங்கப்படுகிறது எனவும், இந்தப் பிரச்னைக்கு பல்கலைக்கழகம் தீா்வு காண வேண்டியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் விருதுநகா் மாவட்டச் செயலா் ஆனந்த கண்ணன் தலைமை வகித்தாா். மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் டீலன் ஜெஸ்டின், மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, புகா் மாவட்டச் செயலா் சுதா்சன், மாணவா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.