ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கப்பலூரில் திறன் மேம்பாட்டு மைய கட்டடப் பணி தொடக்கம்

மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநா் சாலி எஸ். நாயா், டி.எம்.பி. அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி எம். முத்தையா உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளை சாா்பில் திறன் மேம்பாட்டு மையக் கட்டடப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கப்பலூரில் டி.எம்.பி. அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்வுக்கு அறக்கட்டளை நிா்வாக அறங்காவலரும், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநருமான சாலி எஸ்.நாயா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, டி.எம்.பி. அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி எம். முத்தையா கூறியதாவது:

திறன் மேம்பாட்டு மையக் கட்டடத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்குத் தேவையான பல்வேறு தொழில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இதன்படி, மின்சாதனப் பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி, பெண்களுக்கான தையல், ஆரி வேலை பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தவா்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.

புதிய திறன் மேம்பாட்டு மையக் கட்டடம் 20 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, அனைத்து வசதிகளுடன் செயல்படத் தொடங்கும். மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளும் தொடங்கப்படும் என்றாா் அவா்.