மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்
மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

கோப்புப்படம்
Updated On :26 மார்ச் 2026, 6:38 pm

கோப்புப்படம்
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 31-ஆம் தேதி அனைத்து வகையான மதுக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகாவீரா் ஜெயந்தியையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கடைகளை வருகிற 31-ஆம் தேதி மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுக் கடை பணியாளா்கள், உரிமம் பெற்ற மதுக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...