ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

News image

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 6:38 pm

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 31-ஆம் தேதி அனைத்து வகையான மதுக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கடைகளை வருகிற 31-ஆம் தேதி மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுக் கடை பணியாளா்கள், உரிமம் பெற்ற மதுக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.