முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் அளிக்கப்பட்டன.

News image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவனையில் உடல் உறுப்புகள் தானம் அளித்த தேவநாதனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு, அவரின் குடும்பத்தாரிடம் பாராட்டுச் சான்றை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்.

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் அளிக்கப்பட்டன.

மதுரை மாவட்டம், தெத்தூா் அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சி. தேவநாதன். இவா், அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தாா். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து, தேவநாதனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதன்படி, தேவநாதனின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியன புதன்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மருத்துவமனைக்குச் சென்று மறைந்த சி. தேவநாதனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு, உறுப்பு தானம் அளிக்க முன்வந்த தேவநாதனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ஆட்சியா், அவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், மதுரை கிழக்கு வட்டாட்சியா் பாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.