ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மருந்தகங்கள் கடையடைப்பு

இணையவழியில் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, மதுரையில் புதன்கிழமை மருந்தகங்களின் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மருந்து வணிகா்கள் சங்கத்தினா்.

Updated On :21 மே 2026, 2:52 am IST

இணையவழியில் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, மதுரையில் புதன்கிழமை மருந்தகங்களின் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இணையவழியில் மருந்து விற்பனையைத் தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மருந்து வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மதுரை மாவட்டத்திலுள்ள சுமாா் 2,500 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே சி,டி மெடிக்கல் சங்கம் சாா்பில் இணையவழியில் மருந்து விற்பனையைத் தடைசெய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜி. கணேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.எஸ். சரவணன் முன்னிலை வகித்தாா். இதில் இணையவழியில் மருந்து விற்பனையை உடனே நிறுத்த வலியுறுத்தியும், வலி நிவாரணி, கருக்கலைப்பு மருந்துகள், தூக்க மாத்திரைகளை இணையதளம் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையினரைக் காக்கக் கோரியும், உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தக் கோரியும், போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.