மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல தெருக்களில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டிச் செல்கின்றனா். மேலும், சாலைகளில் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாள்களாக அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பருவ மழைக் காலங்களில் தேங்கிய குப்பைகளிலிருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிருஷ்ணா மணிநகா் பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் பொது இடங்களில் தான் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றனா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு தெருவிலும் போதுமான அளவு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். மேலும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், நாள்தோறும் குப்பைகளைச் சேகரிக்க தூய்மைப் பணியாளா்களை அனுப்பவும் மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சா்க்கரை அளவு: முறையாக கண்காணிக்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்

களக்காடு நகராட்சி மக்களுக்கு நிகழாண்டுக்குள் தாமிரவருணி குடிநீா் விநியோகம் சாத்தியமா?
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின் தடை

ஏற்காட்டில் குடியிருப்பு, சுற்றுலா பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்க கோரிக்கை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



