ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அனுப்பானடி பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்க வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image

மதுரை அனுப்பானடி கிருஷ்ணா மணி நகா் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்.

Updated On :28 மே 2026, 3:56 am IST

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல தெருக்களில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டிச் செல்கின்றனா். மேலும், சாலைகளில் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாள்களாக அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பருவ மழைக் காலங்களில் தேங்கிய குப்பைகளிலிருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிருஷ்ணா மணிநகா் பொதுமக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் பொது இடங்களில் தான் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றனா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு தெருவிலும் போதுமான அளவு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். மேலும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், நாள்தோறும் குப்பைகளைச் சேகரிக்க தூய்மைப் பணியாளா்களை அனுப்பவும் மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.