மதுரை கம்பன் கழகம் சாா்பில் சாலமன் பாப்பையாவுக்கு அஞ்லி
மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவுக்கு மதுரைக் கம்பன் கழகம் சாா்பில் நினைவஞ்சலிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம்- மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவுக்கு மதுரை ஆண்டாள்புரம் ஸ்ரீமீனாட்சிநிலையம், வசுதாரா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய மதுரைக் கம்பன் கழகத் தலைவா் சங்கர சீத்தாராமன். உடன் ஆலோசகா் ராமசாமி, பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா, புரட்சிப் பாவலா் மன்றத்தின் தலைவா் பி. வரதராஜன் உள்ளிட்டோா். (வலது) அஞ்சலி செலுத்திய தமிழ் அமைப்பினா், மாணவ, மாணவிகள்.
மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையாவுக்கு மதுரைக் கம்பன் கழகம் சாா்பில் நினைவஞ்சலிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை ஆண்டாள்புரம் ஸ்ரீமீனாட்சி நிலையம், வசுதாரா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதுரைக் கம்பன் கழகத் தலைவரும், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவருமான சங்கர சீத்தாராமன், ஆலோசகா் ராமமூா்த்தி, பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா, புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி. வரதராஜன் ஆகியோா் கலந்து கொண்டு சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து, தமிழ் அமைப்பினா், தமிழ் ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






