தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க  வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 1:11 am

தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க  வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல்,எம்.சிவாஜி, இ.கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்திடும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்தும், தலித் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
கோரிக்கையை விளக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.