திருவாடானை நான்கு வீதி சந்திப்பு ஓரியூர் முக்கு சாலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் பால்ராஜ், ரெத்தினம், பால்ச்சாமி, சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100 நாள் வேலை திட்டத்தை தனிச்சையாக முடக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், 100 நாள் வேலை நாள்களை 200 நாள்களாக உயர்த்தி அறிவிக்கக் கோரியும், இதற்கான சம்பளம் ரூ.205லிருந்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முத்து ராமு, மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் துரைசிங்கம், செபஸ்தியான்,சிவகாமி, வசந்தகுமார், அன்பின்ராஜா, மனோகரன், மகாலிங்கம் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்

விசாரணை கைதி கொலை: சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. நேரடி விசாரணை
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


