8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கார் மோதி தொழிலாளி சாவு

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை செவ்வாய்க்கிழமை  இரவு கார் மோதியதில் தொழிலாளி  உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை செவ்வாய்க்கிழமை  இரவு கார் மோதியதில் தொழிலாளி  உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் மகன் மகாலிங்கம்(34). இவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமேசுவரம் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் வேலை செய்து வந்தார். புதன்கிழமை பேருந்து நிலையத்துக்குள் வந்த கார் ஒன்று திடீரென கட்டண கழிப்பறைக் கட்டடம் மீது மோதியது. இதில்  கட்டணக் கழிப்பறை அருகே தூங்கிக் கொண்டிருந்த மகாலிங்கம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
காரின் ஓட்டுநர் உடனடியாக காரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம்   கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரான ராமநாதபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரி மகன் நவீனை(20)தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.