காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சேதம்: கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு

கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கமுதி அடுத்துள்ள பேரையூர்,-பாக்குவெட்டி, கருங்குளம் வழியாக கமுதிக்கு மிகப் பெரிய குழாய்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சாலையோரங்களில் உள்ள இதன் குழாய்கள் அடிக்கடி வாகன போக்குவரத்தால் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது.
இதனால், கமுதி, பாக்குவெட்டிக்கு குடிநீர் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய்கள் பழுது காரணமாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அதிக செலவும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றியமைத்து,கிராமங்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.