கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
பரமக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் காளிமுத்து (45). இவர் பரமக்குடி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததாக


பரமக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் காளிமுத்து (45). இவர் பரமக்குடி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் உத்தரவின் பேரில் பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர் பி.பொன்ராஜ், கஞ்சா வியாபாரி காளிமுத்துவை புதன்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...