மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கமுதி அருகே பெண்கள் பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கமுதி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பெண்கள் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:59 am

DIN

கமுதி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பெண்கள் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கமுதி அருகே பெருநாழி ஊராட்சிக்குள்பட்ட பெருநாழி- கோவிலாங்குளம் சாலையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து கடந்த 2001-இல், கழிப்பறை, குளியலறைகள் மற்றும் ஆழ்துளை கிணறு வசதியுடன்  ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.  இதனிடையே கடும் வறட்சியின் காரணமாக இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீரின்றி இந்த பொது சுகாதார வளாகம் முடங்கியது.
 இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி சார்பில் இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று மீண்டும் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 
இந்நிலையில் மீண்டும்  முறையான பராமரிப்பு 
இல்லாததால் இந்த பொது சுகாதார வளாகத்தை சுற்றிலும் முள்செடிகள் 
வளர்ந்து, புதர் மண்டி கிடப்பதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு கட்டட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும்  நிலையில் உள்ளது. 
இதனால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 
எனவே மாவட்ட நிர்வாகம், பெருநாழி ஊராட்சி நிர்வாகம் ஆகியவை தலையிட்டு இந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.