காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் நடுவிழா

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, ராமநாதபுரம் அருகேயுள்ள சுந்தரமுடையான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.   

Updated On :7 ஜூன் 2018, 7:13 am IST

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, ராமநாதபுரம் அருகேயுள்ள சுந்தரமுடையான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.   
 பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு -நீதிமன்ற நீதிபதியுமான வி.ராமலிங்கம், வனச்சரகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரக்கன்றுகளை நட்டு வைத்த பின்னர் பள்ளிக்கு அருகில் உள்ள சீனியப்பா கடற்கரையிலிருந்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியின் நிறைவில் பாம்பன் பாலத்தின் வழியாகச் செல்லும் வாகனங்களில் இருந்த பயணிகளிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிக்குமாறு எடுத்துக் கூறி அவற்றை அனைவருக்கும் இலவசமாகவும் முதன்மை நீதிபதி வழங்கினார். விழாவிலும், பேரணியிலும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தை சேர்ந்த காவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.