கமுதி அருகே அரசு பள்ளி முன்புள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றது. அப்போது, கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்புள்ள சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கமுதியில் இருந்து சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், வாலிநோக்கம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தை சந்திக்க
நேரிடுகிறது.
மேலும், பள்ளி முன்பாக பள்ளம் உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த பள்ளத்தை மூடி சீர்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

