அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

திருவிடைமருதூரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே திருவிடைமருதூர் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:34 am IST

திருவாடானை அருகே திருவிடைமருதூர் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகா கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி திருவிடைமிதியூர், தொத்தார்கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே போல் காலனி குடியிருப்பு  பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதிக்கென்று கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு குழாய் இணைப்பின்றி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டதில் இருந்து தண்ணீர் இதில் வரவே இல்லை. 
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது: குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் புகைப்படம் எடுத்துச் சென்றனர். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் வரவே இல்லை.
 இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய அவலம் உள்ளது என்றனர். 
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.