ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஏர்வாடியை பேரூராட்சியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக  தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட 

Updated On :13 பிப்ரவரி 2019, 8:26 am IST

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக  தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஏர்வாடி பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தற்போது ஊராட்சியாக உள்ளது. இதில் வெட்டமனை, சின்ன ஏர்வாடி, சேர்மன்நகர்,  முத்தரையர்நகர், ஏராந்துறை, தொத்தமன்வாடி, பொன்நகர், நாச்சம்மைபுரம், மெய்யன்வலசை உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு மேல் உள்ளன. 
இங்குள்ள ஏர்வாடி தர்ஹா பிரசித்தி பெற்றது. ஆகவே பல சிறப்புகள் பெற்றுள்ள ஏர்வாடியை ஊராட்சி தரத்திலிருந்து பேரூராட்சியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
மனு அளிக்க ஏர்வாடி பகுதி சரவணன் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுவை பரிசீலித்து விதிமுறைக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் அலுவலர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.