திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாலை விபத்து, குற்றங்களை தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:27 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் சரக துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துகள் தொடர்பான புகார்களை 9498181457 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் செல்லும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்துக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படும். இதனால் காவல் துறையினர் மூலம் விபத்துகள் தொடர்பான பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.