ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:28 am IST

பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட போக்குவரத்து காவல்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், மோட்டார் வாகன பாதுகாப்புத்துறை மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில்  தியாகி முத்துச்சாமி அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதரம் சரக காவல்துறை துணைத் தலைவர் என்.காமினி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்புப் படை நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.அய்யப்பன் முகாமின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். 
 அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் வி.சரவணன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பொ.சந்திரசேகரன் ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களிடம் வாகன ஓட்டுநர் உரிமத்தின் அவசியம் மற்றும் விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆர்.மோகன்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.மாணிக்கம் ஆகியோர் பேசினர். 
இதில் கருத்தாளராக அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் என்.ஆர்.நாகநாதன் கருத்துக்களை எடுத்துரைத்தார். வாகன விபத்திற்கான காரணங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் டி.பி.ராஜகோபால் பேசினார். நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சங்கர் வரவேற்றார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 
 பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில்100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் ரத்த தானம் செய்தனர். அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஏ.இருளப்பன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.