திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்குருங்குடி ஜீயர் தரிசனம் செய்தார்.
ரத சப்தமியை முன்னிட்டு இக்கோயிலுக்கு வந்த ஜீயரை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ராமு, கோயில் பேஷ்கர் கண்ணன் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு
ஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாசனித்தாயார், ஆண்டாள், தர்ப்பசயனராமர், பட்டாபிஷேக ராமர் ஆகிய சன்னதிகளில் அவர் தரிசனம் செய்து மங்களா சாசனம் செய்தார்.
பின்னர் ஆண்டவன் ஆசிரம தேசிகன் சன்னதியில் ஜீயர் மங்களா சாசனம் செய்தார்.
அப்போது கோயிலில் இருந்து சுவாமி தேவிபிராட்டியருடன் ஜீயர் மடத்தில் எழுந்தருளிய திருமஞ்சனம் நடைபெற்றது.இந்தநிகழ்ச்சியில் ஜே.எஸ்.வாசன் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் பல்லக்கில் சுவாமி, பிராட்டியருடன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் திருட்டு

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

மக்கள் தீா்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யாா்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி






