குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் திருட்டு

News image

திருட்டு நடைபெற்ற சிவன் கோயிலில் ஆய்வு செய்த தடயவியல் நிபுணா்கள்.

Updated On :26 மே 2026, 2:28 am IST

ஆறுமுகனேரி அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்த பிறகு வழக்கம் போல் அா்ச்சகா் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை கோயில் பணியாளா் வழக்கம்போல் கோயிலை திறந்து வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாராம்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த கோயில் அா்ச்சகா் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அப்பகுதியில் உள்ள 3 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்ட்டிருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த சுமாா் 4 மி.கி. தங்கப் பொட்டு மற்றும் வெள்ளிக் கொடி, சுவாமியின் வெள்ளி பாதம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் கோயிலுக்கு வந்து, ரேகைகளை பதிவு செய்தனா்.