முதுகுளத்தூர் அருகே குமாரக்குறிச்சி - கருமல் கிராமங்களுக்கிடையே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கருமல், குமாரக்குறிச்சி கிராமங்களுக்கு இடையில் பிரதான சாலையில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பிகள் சேதமடைந்து பல மாதங்களாக தரையில் கிடந்தது. தற்போது கிராம மக்கள் கருவேல மரக்குச்சியை ஊன்றி மின்கம்பியை தூக்கி வைத்துள்ளனர். இருப்பினும் கால்நடை மேய்ச்சலுக்கு அவ்வழியே செல்லும்போது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்






