ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் கூறியதாவது: ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 157 ஆவது ஜயந்தி விழா நடைபெறவுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 27) காலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழாவுக்கான பூஜைகள் தொடங்குகின்றன.
பின்னர் காலை 7 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்பின் காலை 9 மணிக்கு பஜனை நடைபெறும். பஜனைக்குப் பின்னர் உலக நன்மைக்காக ஹோமம் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவில் ஆன்மிக உரையாளர்கள் பங்கேற்கின்றனர். இதன் பின் அர்ச்சனையும், மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


