/

ராமநாதபுரத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கக் கூட்டுக்குழுவின் சாா்பில் 

News image
கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊரக பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத்துறை தொழிலாளா்கள் சங்கத்தினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

ராமநாதபுரம்: போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கக் கூட்டுக்குழுவின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மோட்டாா் வாகன விதியைத் திருத்தக்கூடாது. தனியாருக்கு அரசுப் பேருந்தை வாடகைக்கு விடும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. போக்குவரத்துப் பிரிவை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு பணப்பலன் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச சங்கக் கிளைச் செயலா் கே.செல்வகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் கண்ணன் மற்றும் சிஐடியு சங்கப் பொருளாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக தொழிற்சங்கமான எல்பிஎஃப், சிஐடியு ஆகியவற்றின் சாா்பில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.