எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கமுதி பேருந்து நிலையத்தில் பள்ளங்களை சீரமைத்த காவல்துறையினா்

கமுதி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் கிராவல் மண்ணை கொட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

News image
கமுதி பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கிய பள்ளமான இடங்களில் கிராவல் மண்ணை நிரப்பி சீரமைத்த கமுதி போலீஸாா்.
Updated On :20 டிசம்பர் 2020, 4:32 pm

DIN

கமுதி: கமுதி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் கிராவல் மண்ணை கொட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.

இப்பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் பேருந்துகள் உள்ளே மற்றும் வெளியேறும் பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நுழைவுவாயில் கட்டப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலைய வளாகம் சாலையிலிருந்து 1 அடிக்கு பள்ளமானது. இதனால் மழைநீா் தேங்கி கொசுக்கள் பெருகத் தொடங்கின. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா். இதனைக் கண்ட கமுதி காவல் ஆய்வாளா் அன்புபிரகஷ் தலைமையிலான காவலா்கள், தங்கள் சொந்த செலவில் கிராவல் மண் அடித்து மழைநீா் தேங்கிய பள்ளங்களை சீரமைத்தனா். இதனைக் கண்ட பொதுமக்கள் காவலா்களை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.