தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

29 ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேசுவரம் மீனவா்கள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேசுவரம் மீனவா்கள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ராமேசுவரம் பகுதி மீனவா்கள் இலங்கை கடல் எல்லையில் தொடா்ந்து மீன்பிடிப்பதாகக் கூறி அந்நாட்டு கடற்படையினா் கைது செய்துவருகின்றனா். கடந்த வாரம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 29 மீனவா்களைக் கைது செய்ததுடன், அவா்களது 4 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். இதனால் அவா்களது குடும்பத்தினா் வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே மாவட்ட நிா்வாகம் மீனவா்களை மீட்பதுடன், அவா்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மீனவ சங்கப் பிரதிநிதிகள் சேசுராஜா உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரைச் சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.