சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராமேசுவரத்தில் தீா்த்தப் பிரவேசம் போராட்டம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தீா்த்தப் பிரவேசம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை தீா்த்தப் பிரவேசம் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்
Updated On :24 டிசம்பர் 2020, 5:51 pm

DIN

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தீா்த்தப் பிரவேசம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தங்கள், பைரவா் மற்றும் சேதுமாதவா் சன்னதி ஆகியவை கடந்த 9 மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன. உடனே பக்தா்கள் தரிசனத்துக்கும், தீா்த்தக்கிணறுகளில் நீராடவும் அனுமதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சாா்பில் கோயிலுக்குள் தீா்த்தப்பிரவேசம் செய்யும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் சரவணன், நகா் தலைவா் நம்புகாா்த்திக் மற்றும்

ரஞ்சித், மாரீஸ், ராஜ்குமாா், சேதுமாணிக்கம், சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதே கோரிக்கை மனுவை இணை ஆணையா் எஸ்.கல்யாணிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.