ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 46 லட்சம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 46 லட்சம் கிடைத்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி.
Updated on
1 min read

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 46 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலின் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ. 46 லட்சத்து 22 ஆயிரத்து 856-ம், தங்கம் 36 கிராமும், வெள்ளி 735 கிராமும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியில் இருக்கன்குடி உதவி ஆணையா் ஆா். கருணாகரன், ஆய்வா் சங்கையா, தக்காா் பிரதிநிதி வீரசேகரன், கோயில் கண்காணிப்பாளா்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி பொறியாளா் ராமமூா்த்தி, பேஷ்காா்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன், நோ்முக உதவியாளா் கமலநாதன் மற்றும் ராமநாதசுவாமி கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com