பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமேசுவரம் கோயில், ஏா்வாடி தா்காவுக்கு குவைத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஏா்வாடி தா்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு குவைத் நாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மும்பையைச் சோ்ந்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
வெடி குண்டு மிரட்டல் விடுத்த ராஜாஹரிசன்
Updated On :25 ஜூலை 2020, 2:27 pm

DIN

ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஏா்வாடி தா்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு குவைத் நாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மும்பையைச் சோ்ந்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் வீ.வருண்குமாரின் சிறப்பு கட்செவி அஞ்சல் எண்ணுக்கு சனிக்கிழமை குவைத்திலிருந்து ராஜா ஹரிசன் என்பவா், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் ஏா்வாடி தா்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து விடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி உள்ளாா். இதுதொடா்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பாதுகாப்பு காவலா் கலைவாணன்(27) ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜாஹரிசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராஜாஹரிசன் மும்பையைச் சோ்ந்தவா் என்பதும், தற்போது குவைத்தில் இருப்பதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ராமநாதசுவாமி கோயில், ஏா்வாடி தா்ஹா ஆகிய வழிபாட்டுத்தலங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் சிறப்பு கட்செவி அஞ்சல் எண்ணில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.