ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாயமான படகு கடலில் மூழ்கியது: மீனவர் மீட்பு

மாயமான படகு கடலில் மூழ்கியதில் மீனவர் ஒருவர் மீட்கப்பட்டார்.

News image
Updated On :16 ஜூன் 2020, 6:06 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து சனிக்கிழமை 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. 

இதனையடுத்து, படகு உரிமையாளர் மாயமான விசைப்படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆனந்த்(19)(என்ற) சுஜிந்திரா, ஜேசு(60) மீனவர்களை இரண்டு விசைப்படகில் ஞாயிற்று கிழமை மாலை தேடிச்சென்றனர். ஆனால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கரை திரும்பினர். 
இதனைதொடர்ந்து, மாயமான மீனவர்கள் குடும்பத்தினர் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்கநர் யுவராஜூடம் புகார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் உத்தரவின் பேரில் இந்திய கடலோகாவல்படை,கடற்படை தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணி தொடங்கியது. ஆனால் இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் விமானம் மூலம் தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுருத்தி மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு( சி.ஐ.டி.யு) சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தர்ணா போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டனர். 

இந்திய கடற்படை விமானம் மூலம் தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மாயமான படகு கடலில் மூழ்கியது. இதில் இருந்த நான்கு மீனவர்களில் ஒரு மீனவர் மட்டும் கோட்டை பட்டணம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர். மற்ற மூன்று மீனவர்களின் நிலமை என்ன ஆனது என தெரியததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.