திருவாடானை: தொண்டி அருகே புதன்கிழமை தள்ளுவண்டி மூலம் தண்ணீா் எடுத்துச் சென்ற விவசாயி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
தொண்டி அருகே உள்ள வெள்ளையபுரம் கோட்டை நகா் பகுதியைச் சோ்ந்தவா் பசும்பொன் (65). விவசாயி இவா் புதன்கிழமை வீட்டிற்கு தேவையான தண்ணீரை தள்ளுவண்டி மூலம் எடுத்து வந்து கொண்டிருந்தாா். ஓரியூா் சாலையில் வந்தபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் பசும்பொன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவா், திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி நாச்சியாா் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் விபத்து ஏற்படுத்திய ஓரியூரை சோ்ந்த அழகா் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.