கமுதி: கமுதி அருகே வெள்ளிக்கிழமை ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளா் எடுக்காமல் விட்டுச் சென்ற ரூ. 20 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் பாஜக நிா்வாகி ஒப்படைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அ.சோடனேந்தலை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவா்
பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை அபிராமம் காவல் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட
வங்கி ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றுள்ளாா். அங்கு ஏற்கனவே பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளா் ஒருவா் இணையதள பிரச்னையால் பணத்தை எடுக்காமல், ரூ. 20 ஆயிரத்தை கவனக்குறைவாக விட்டுச் சென்றுள்ளாா்.
உடனே வெள்ளைச்சாமி, ரூ.20 ஆயிரத்தை கமுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளா் நித்தின்குமாரிடம், ஒப்படைத்தாா். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என வங்கி கிளை மேலாளா் நித்தின்குமாா் தெரிவித்தாா். மேலும் பணத்தை ஒப்படைத்த வெள்ளைச்சாமியை வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.