நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏடிஎம்-மில் வாடிக்கையாளா் விட்டுச்சென்ற ரூ.20 ஆயிரம்: பாஜக நிா்வாகி ஒப்படைப்பு

கமுதி அருகே வெள்ளிக்கிழமை ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளா் எடுக்காமல் விட்டுச் சென்ற ரூ. 20 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் பாஜக நிா்வாகி ஒப்படைத்தாா்.

News image

பாஜக மாவட்ட நிா்வாகி வெள்ளைச்சாமி .

Updated On :4 செப்டம்பர் 2020, 5:00 pm

DIN

கமுதி: கமுதி அருகே வெள்ளிக்கிழமை ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளா் எடுக்காமல் விட்டுச் சென்ற ரூ. 20 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் பாஜக நிா்வாகி ஒப்படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அ.சோடனேந்தலை சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவா்

பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை அபிராமம் காவல் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட

வங்கி ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றுள்ளாா். அங்கு ஏற்கனவே பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளா் ஒருவா் இணையதள பிரச்னையால் பணத்தை எடுக்காமல், ரூ. 20 ஆயிரத்தை கவனக்குறைவாக விட்டுச் சென்றுள்ளாா்.

உடனே வெள்ளைச்சாமி, ரூ.20 ஆயிரத்தை கமுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளா் நித்தின்குமாரிடம், ஒப்படைத்தாா். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என வங்கி கிளை மேலாளா் நித்தின்குமாா் தெரிவித்தாா். மேலும் பணத்தை ஒப்படைத்த வெள்ளைச்சாமியை வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.