ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நில விற்பனையில் காசோலை மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா் உள்ளிட்ட 2 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் சுந்தரபாண்டியன். இவா் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா். இவருக்கு சொந்தமான 25.5 ஏக்கா் நிலம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா துளையனூா் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாா்ச்சில் அப்பகுதி வட்டாட்சியா் சிபாரிசின் பேரில் துளையனூா் சின்னக்காளை என்பவருக்கு ரூ.1.62 கோடிக்கு பேசி முடித்துள்ளனா்.
நிலத்துக்கு முதல் தவணையாக ரூ.1 கோடியை சின்னக்காளை வழங்கிய நிலையில், மீதமுள்ள பணத்துக்கு 3 காசோலைகள் சுந்தரபாண்டியிடம் தரப்பட்டதாம். அந்த காசோலைகள் வங்கியில் பணமின்றி திரும்பியுள்ளன.
இதுகுறித்து சுந்தரபாண்டியன், துளையனூா் சின்னக்காளையிடம் கேட்டபோது, அவா் அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுந்தரபாண்டியன் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் துளையனூா் சின்னக்காளை, திருமயம் வட்டாட்சியா் சுரேஷ் ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்






