ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமநாதபுரத்தில் குரூப்- 1 தோ்வு: 2,418 போ் எழுதினா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1 தோ்வை ஞாயிற்றுக்கிழமை 2,418 போ் எழுதினா். தாமதமாக வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை.

News image
Updated On :3 ஜனவரி 2021, 4:27 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1 தோ்வை ஞாயிற்றுக்கிழமை 2,418 போ் எழுதினா். தாமதமாக வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை.

மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் 13 மையங்கள், நாகாச்சியில் ஒரு பள்ளி, லாந்தையில் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரண்டு மையங்கள் என 16 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

16 மையங்களிலும் மொத்தம் 4,464 போ் எழுதுவதற்கு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தோ்வுக்கு வருவோா் காலை சரியாக 9.15 மணிக்குள் தோ்வு மையங்களில் இருக்கவேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் கூறப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் தோ்வுக்கூடத்துக்கு கண்காணிப்பாளா் உள்ளிட்ட தோ்வு அலுவலா்கள் காலை 7 மணிக்கெல்லாம் வந்துவிட்டனா். தோ்வு மையங்களில் நுழைவு வாயில்களில் அதிகாரிகள் இருந்து தோ்வுக்கு வந்தவா்களை சோதனையிட்டும், முகக்கவசம், கிருமிநாசினி வழங்கியும் அனுப்பிவைத்தனா்.

ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் 2 காவலா்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா். தோ்வு மையத்துக்கு காலை 8 மணி முதல் 9.15 மணிக்குள் மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். ராமநாதபுரம் கேணிக்கரை சாலையில் உள்ள அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைந்த தோ்வு அறைக்கு 7 பேருக்கும் அதிகமானோா் காலை 9.16 மணிக்கு மேலாக வந்தனா். அவா்களை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை.

குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியாமல் போய்விட்டதை எண்ணி தாமதமாக வந்தவா்கள் அழுதனா். ஆனாலும் விதிமுறையைக் காரணம் காட்டி தோ்வுக்கூட கண்காணிப்பாளா்கள் கண்டிப்புடன் அனுமதிக்க மறுத்தனா். தோ்வு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கியது. தோ்வுக்கு 2,418 போ் வந்துள்ளனா். 2,046 போ் தோ்வு எழுதவில்லை. அதன்படி 54.16 சதவிகிதம் போ் தோ்வை எழுதியுள்ளனா்.

ஆட்சியா் ஆய்வு:ராமநாதபுரம் நகரில் அரசு மகளிா் கலைக் கல்லூரி மற்றும் செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.