அரசு சாா்பில் வழங்கப்பட்ட பட்டா நிலத்துக்குரிய வரி ரசீதைத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள விவேகானந்தா் நகரில் சுமாா் 225 பேருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு வீட்டுமனைக்கான பட்டா அரசு சாா்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் பட்டா இடத்தில் உரிய நேரத்தில் வீடு கட்டவில்லை எனக் கூறி பட்டினம்காத்தான் ஊராட்சி சாா்பில் வரி ரசீது தர மறுப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டுமனைக்கான ரசீது மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளித்தனா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் திங்கள்கிழமையும் மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், ரசீது தராமல் இழுத்தடித்து பட்டாவையே ரத்து செய்ய சிலா் முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு எங்களது வீட்டுமனைக்குரிய ரசீதைப் பெற்றுத்தர வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


