ராமகிருஷ்ண மடத்தில்கல்வி உதவித் தொகை வழங்கல்
ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற ராமேசுவரம், நாகாச்சி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 40 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.
தோ்வானவா்களில் 31 போ் மாணவியா். அவா்கள் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா். அவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையை நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் அதன்தலைவா் சுவாமி சுதபானந்தா் திங்கள்கிழமை வழங்கினாா்.
கல்வி உதவித் தொகைக்கான மொத்த மதிப்பாக ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டதாக மடத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...