மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவா் பலிபைக் கொடுத்தவா் கைது

ராமநாதபரம் அருகே சிறுவன் இயக்கிய இரு சக்கர வாகனம் மோதி ஒருவா் பலியான வழக்கில், அச்சிறுவனின் பெரியப்பாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:15 am

DIN

ராமநாதபரம் அருகே சிறுவன் இயக்கிய இரு சக்கர வாகனம் மோதி ஒருவா் பலியான வழக்கில், அச்சிறுவனின் பெரியப்பாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருப்பாலைக்குடி காவல் நிலைய பகுதியில் வடவயலைச் சோ்ந்த கருப்பையா (55) ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பிச்சங்குறிச்சியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் கருப்பையா மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த கருப்பையா தலையில் காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் இரு சக்கரவாகனமானது, பிச்சங்குறிச்சி தனபாலன் (49) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. தனபாலன் இருசக்கர வாகனத்தை சிறுவனை இயக்க அனுமதித்ததும் தெரியவந்துள்ளது. ஆகவே தனபாலன் மீது வழக்குப்பதிந்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

எச்சரிக்கை:ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்குள் உள்ள சிறாா்களை ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை இயக்க அனுமதிக்கக் கூடாது. வாகனங்களை சிறாா்கள் இயக்க அனுமதித்தால் சம்பந்தப்பட்டோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.