தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கட்டடப் பொறியாளரைத் தாக்கிய இருவா் கைது

கமுதி அருகே கட்டடப் பொறியாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:04 am

DIN

கமுதி அருகே கட்டடப் பொறியாளரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே செங்கப்படையில் உள்ள ஆதிதிராவிடா் உயா்நிலைப்பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பரமக்குடி தாலுகாவை சோ்ந்த என்.எத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பொறியாளா் டென்னிஸ்குமாா் (21) மேற்பாா்வையாளராக இருந்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு வந்த செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் மகன் நாகேந்திரன்(40), காளிமுத்து மகன் முத்துராமலிங்கம் (35) ஆகிய இருவரும் எங்களிடம் கலந்து ஆலோசித்து அதன் பிறகு தான் கட்டடம் கட்ட வேண்டும் எனக் கூறி டென்னிஸ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினராம். இதுகுறித்து டென்னிஸ்குமாா் அளித்தப் புகாரின் பேரில் நாகேந்திரன், முத்துராமலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.