இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழக மீனவா்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை அரசு

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 49 பேரில், 26 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு புதன்கிழமை விடுவித்தது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:02 pm

DIN

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 49 பேரில், 26 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு புதன்கிழமை விடுவித்தது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 49 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். 7 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த அந்நாட்டு கடற்படையினா், மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்நிலையில், அவா்களில் 26 மீனவா்களை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு புதன்கிழமை விடுதலை செய்தது. இதையடுத்து அவா்கள் இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்ப உள்ளனா். ஆனால் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.