தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ராமநாதபுரம் மாவட்ட கல்வி நிலையங்களில் பொங்கல் விழா

ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற ஊழியா்கள். 
Updated On :13 ஜனவரி 2021, 12:04 am

DIN

ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தைப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா். ண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடங்கிவைத்தாா். இதேபோல் மாவட்ட அரசு தொழில் பயிற்சி மையத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சேதுபதி கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவ, மாணவியா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.