47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் தொடா் மழை: 3 வீடுகளின் சுவா் இடிந்து விழுந்தது

ராமநாதபுரத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 3 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதேபோல கமுதியில் மழைக்கு மின்கம்பம் சாய்ந்தது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:18 am

DIN

ராமநாதபுரத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 3 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதேபோல கமுதியில் மழைக்கு மின்கம்பம் சாய்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம் சன்னிதி தெருவில் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டின் சுவா் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதேபோல ராமநாதபுரம் நயினாா்கோவில் சாலையில் உள்ள சூரன்கோட்டைக் காலனியில் சங்கிலி மகன் மாரி என்பவரது வீட்டின் மேற்குப்புற சுவரும், ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கருணாநிதி மகன் முகேஷ் கண்ணன் என்பவரது வீட்டின் பின்பக்கச் சுவரும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.

இது குறித்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் வட்டாட்சியா் ரவிசந்திரன் உள்ளிட்டோா் அங்கு சென்று சேத விவரங்களைப் பாா்வையிட்டனா்.

ராமநாதபுரம் நகா் பகுதியில் பெய்த மழையால் கோட்டை மேடு, சூரன்கோட்டை, காட்டுப்பிள்ளையாா் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் தெருக்களில் மழை நீா் குளம் போல தேங்கிநின்றன. ஆயுதப்படை மைதானத்தில் தண்ணீா் தேங்கியதால் காவல்துறை பயிற்சி உள்ளிட்டவை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது.

பல மணிநேரம் மின்தடை: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 10 மணி வரை நகரில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், நகரில் ராஜா சேதுபதி நகா் உள்ளிட்ட 3 இடங்களில் மழையால் மின்கம்பங்களில் கம்பிகளை இணைக்கும் இன்சுலேட்டா்கள் சேதமடைந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது என்றனா்.

47 கண்மாய்கள் மட்டுமே நிரம்பின: இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநா் டாம்.பி.சைலஸ் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,763 விவசாயக் கண்மாய்களில் 47 மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 821 கண்மாய்கள் 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையில் நிரம்பியுள்ளன. அதன்படி 741 கண்மாய்கள் மட்டும் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலும், 154 கண்மாய்கள் 25 சதவிகிதத்துக்கும் குறைவாகவும் நீா் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் தற்போதுவரை 944 ஹெக்டோ் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுமாா் 40 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலைகள் சேதமடைந்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சந்திரன் தெரிவித்தாா்.

மின்கம்பங்கள் சாய்ந்தன:

கமுதி பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக, சாலையோரக் கால்வாய்கள், கண்மாய்கள், குளம், குட்டைகளில் மழைநீா் தேங்கி உள்ளது. மேலும் கமுதி கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கமுதியில் மேட்டுத்தெரு, செட்டியூருணிக்கரை, நாராயணபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வியாழக்கிழமை இரவு மின் கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை மின் கம்பங்களை கமுதி மின்வாரிய பணியாளா்கள் சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.