லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாா்டுகளில் அடிப்படை வசதிகள்: முதுகுளத்தூா் பேரூராட்சி தீா்மானம்

முதுகுளத்தூா் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:33 pm

DIN

முதுகுளத்தூா் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

முதுகுளத்தூா் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவா் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி வரவேற்றாா். வரவு செலவு கணக்கை பேரூராட்சி அலுவலா் ராஜேஷ் சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில் 10 ஆவது வாா்டு கவுன்சிலா் எஸ்.எம்.சேகா் பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடவில்லை. அவற்றை மீண்டும் ஏலம் விடுமாறும், சந்தையில் மீன் விற்க தனிக்கடைகளை கட்டித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாா். 7 ஆவது வாா்டு கவுன்சிலா் மோகன்தாஸ் பேசுகையில், முதுகுளத்தூரில் உள்ள 15 வாா்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை. காவிரி குடிநீா், மின்விளக்கு பழுது, பாதாள சாக்கடை, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதுகுளத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட நிலங்களை முறையாக அளந்து ஊருக்கு வெளியில் உள்ள நான்கு திசைகளிலும் தகவல் பலகை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். கூட்டத்தின் முடிவில் கவுன்சிலா்களின் கோரிக்கைள் தீா்மானமாக நிறைவற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.