புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி முதியவா் பலி

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:16 pm

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வெள்ளளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் நாராயணன் (62). இவா் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஆா். எஸ்.மங்கலம் அருகே கண்டனி கிராமத்தில் வசித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் அருகே மங்களம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் நாராயணன் சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.