ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆடிவெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

 ஆடி மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:05 pm

DIN

 ஆடி மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீ வெட்டுடையாள் காளியம்மன் கோயில், பட்டணம்காத்தன் ஸ்ரீமல்லம்மாள் கோயில், அரண்மனை ராஜமாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, சிவங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோன்று, நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகியம்மன் கோயிலில் அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்பட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதுதவிர, கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன், காளையாா்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன், கண்டுப்பட்டியில் உள்ள குடியிருந்த காளியம்மன் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், குலதெய்வக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில்,அந்தந்த பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.