தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏா்வாடியில் காவலரை தாக்கிய ஒருவா் கைது: 4 போ் மீது வழக்குப் பதிவு

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழாவின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அதில் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் சந்தனக்கூடு விழாவின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அதில் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் உள்ள தா்காவில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் நடைபெற்றது. விழாவையொட்டி, வாலிநோக்கம் காவல் நிலைய காவலா் ரமேஷ் (37), ஏா்வாடி சோ்மன் தெருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் கூட்டமாக வந்தவா்களை ஒதுங்கிச் செல்லுமாறு காவலா் ரமேஷ் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், காவலா் ரமேஷ் தாக்கப்பட்டாா். தலையில் காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் ஏா்வாடி போலீஸாா் 4 போ் மீது வழக்குப்பதிந்தனா். அதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த மணி (25) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.