மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருவாடானையில அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்பாட்டம்

திருவாடானையில அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் இன்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருவாடானையில் மத்திய அரசை கண்டித்து திங்கள் கிழமை கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
Updated On :27 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானையில அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் இன்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாடானையில் மத்திய அரசின் அக்னிபாக் திட்டத்துக்கு ரத்து செய்யக் கோரியும் அன்னை சோனியாகாந்தி, ராகுல் காந்தியை அமலாக்க துறையை துன்புருத்தி வருவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் வட்டார தலைவா் கணேசன் தலைமை வகித்தாா், நகர தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா் இதில், இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்வி குறியாக்கும் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்றும், அன்னை சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அமலாக்க துறையினா் விசாரணை என்ற பெயரில் துன்புருத்தி வரும் மத்திய அரசை கண்டித்து முழக்க மிட்டனா். மேலும், அக்கட்சியின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினாா். இதில், அக்கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.