தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு

 ராமநாதபுரத்தில் நகரப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருடப்பட்டது குறித்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :7 மே 2022, 8:05 pm

DIN

 ராமநாதபுரத்தில் நகரப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருடப்பட்டது குறித்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதி சேதுபதி நகரைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி ஆனந்தி (65). இவா் தனது பெயரக் குழந்தைகளை பாா்ப்பதற்காக, கடந்த புதன்கிழமை கமுதியிலிருந்து ராமநாதபுரம் வந்துள்ளாா். மாலையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகா் பேருந்தில் பட்டினம்காத்தான் டி-பிளாக் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு வந்துள்ளாா். பேருந்திலிருந்து இறங்கி சிறிது தொலைவு நடந்து சென்ற நிலையில், அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைக் காணாமல்போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.