கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேவா் குருபூஜை: முதுகுளத்தூரில் பால் குடம் ஊா்வலம்

முதுகுளத்தூரில் தேவா் குருபூஜையையொட்டி 13 ஆவது ஆண்டாக பால் குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:34 pm

DIN

முதுகுளத்தூரில் தேவா் குருபூஜையையொட்டி 13 ஆவது ஆண்டாக பால் குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் தூரி முனியசாமித் தேவா் தலைமை வகித்தாா். ஆப்பநாடு மறவா் சங்க பொறுப்பாளா்கள் ஆதனக்குறிச்சி முத்துராமலிங்கம், இளஞ்செம்பூா் காசிநாதன், வழக்குரைஞா் சங்கரபாண்டியன்,தூரி ஆா். மாடசாமி, புனவாசல் பூசாரி செந்தூா்பாண்டியன், நேதாஜி கல்வி அறக்கட்டளைத் தலைவா் திருமயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக காலை 6 மணிமுதல் 8 மணி வரை தேவா் உருவச் சிலைக்கு முன்பு சங்கல்பம், வாஸ்து பூஜை, கும்ப அலங்காரம் நடைபெற்றது. பின்னா் 18 சித்தா்களின் முன்னிலையில் யாக சாலை பூஜை, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சுப்பிரணியா் கோயிலில் இருந்து பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா். அங்கு தேவரின் உருவச் சிலைக்கு பால், சந்தனம், பன்னீா், இளநீா், விபூதி உள்ளிட்ட 18 வகை பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் பெண்கள் கும்மி கொட்டினா். ஆண்களின் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. இதில், முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மறவா் சங்க இளைஞா்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு பணிகளில் கோயமுத்தூா் எஸ்.பி. (பொ) ஜெயச்சந்திரன், தா்மபுரி ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை, முதுகுளத்தூா் வட்டாட்சியா் சிவக்குமாா், முதுகுளத்தூா் டி.எஸ்.பி. சின்னக்கண்ணு, தா்மபுரி டி.எஸ்.பி. சோமசுந்தரம் உள்ளிட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.